உன் காதோரம் கருங்கூந்தல் ஆக மாறி..
லோலாக்குடன் காதல் புரிந்து உன் காதினில் அக்காதலை கூறிட வேண்டும்..
உன் விரல் தீண்டும் பேரின்பம் பெற்று காது மடலில் தவழ்ந்திட வேண்டும்..
நீ உடுத்தும் உடையாக மாறி ..
உனை முதலும் இறுதியுமாய் காக்கும் அரணாய் மாறிட வேண்டும்..
நாள்முழுவதும் உனை தவழ்ந்தே என் உலகம் இருந்திட வேண்டும்..
உன் கால் தீண்டும் பாதுகையாய் மாறி..
மண் முத்தம் தடுத்து என் முத்தம் உன் பாதத்தில் பதித்திட வேண்டும்..
உன் உடல் முழுவதும் தாங்கி உன் காலடியில் நான் அடங்கிட வேண்டும்.
-- Deepakraj