செம்மையாக உன்னை மாற்றத் துடிக்கும் நகரமே என் சென்னை..
அலைகடலும் ஆசைகொண்டு, நெடுந்தூர கடற்பரப்பை சேலை என விரித்து ஊடல் கொண்டிடும் நகரமே என் சென்னை..
நிகரில்லா தலைவர்களும், மதம் இல்லா அரசும் கொண்ட மதராசும் என் சென்னை..
கப்படிக்கும் கூவமும், நல்மன மால்களும் கூடி கும்மாளம் அடிக்கும் அழகிய நகரம் என் சென்னை..
ஆழிப்பேரலையும், பேரலையொத்த பெருவெள்ளமும், வாட்டிவதைத்த நன்னீர் வறட்சியும், புரட்டி போட்ட சூறைக்காற்றையும் கண்டு தலைநிமிர்ந்து நின்றவன் என் சென்னை..
தீயாய் பரவிடும் நோய்த்தொற்று என் சென்னையை பாழ் செய்திட இயலுமா..
எம் சென்னையை தூற்றுவோர் சற்றே அறிந்திட முயலுக..
என் ஊர் பெயர் சென்னை.. அதற்கு மற்றொரு பெயரும் இருக்கு...