உனை எண்ணி நான் வரைந்த கோலங்கள் யாவும்.
நீ நீங்கி சென்றபின் அலங்கோலமானதேனோ..
வர்ணித்து வர்ணித்து உனை எண்ணி நான் எழுதிய கவிதைகள் எல்லாம்.
இன்று தன்னிலை கண்டு, பொருள் நீங்கி வெற்று வார்த்தைகள் ஆனதேனோ..
நீயும் நானும் இணைந்து இதுவரை படைத்த நம் எதிர்காலம் யாவும்.
என் விடியலாய் நீ இல்லை என்றுணர்ந்து உயிர் நீங்கி இறந்தகாலம் ஆனதேனோ..
கனவுலகில் அழகழகாய் நாம் பெற்று ஆசையாய் சூட்டிய பிள்ளைகளின் பெயரோ.
இன்று நீ இல்லை என்றபின் தம்முடல் நீங்கி வெறும் பெயர்களாய் இவ்வுலகில் சுற்றுவதேனோ..
தினந்தினம் உன்னோடு வாழ்ந்து புது புது நினைவுகளை படைத்திட துடித்தேன்.
இதுவரை படைத்திட்ட நினைவுகள் யாவுமே உன்னை நீங்கி என்னை வதைப்பதேனோ..
தீர்க்க சுமங்கலியாய் உனை கல்லறை வரை சுமக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
இனிமேல் என் உயிர் நீங்கி கல்லறை செல்லும் வரை உனை காணாது இருப்பேனோ..
நீ என்னை நீங்காதே...
-- Deepakraj