மழுநீதித்தலைவன்
பரந்து விரிந்த இந்த உலகில் நடக்கும் ஒரு நிகழ்வு ஒவ்வொருவரின் பார்வையிலும் பல்வேறு கருத்துகளை பல்வேறு விதமாக இவ்வுலகில் வாழும் நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும். வளர்ந்து வரும் குழந்தைகள் கடிவாளம் பூட்டபட்ட குதிரையைப் போல் ஒரே பார்வையாக செல்லாமல் பரந்து விரிந்து பார்க்க வேண்டும். நன்மையில் இருக்கும் தீமைகளையும் தீமைகளுக்குள் இருக்கும் நன்மைகளையும் பிரித்தரியும் தன்மை வளர்த்து கொள்ளவேண்டும். இதுவே நீதி கதைகளின் முக்கிய நோக்கமாக இருக்கும். எனவே நன்மையாக சொல்லப்பட்ட ஒரு கதையின் மாறுபட்ட கருத்தை இக்கதையின் வாயிலாக குழந்தைகளுக்கு கூறுகிறேன்.